ஆப்நகரம்

கண்ணீரோடு நின்றவர்களை கரை சேர்க்க உதவிய ரவிக்குமார்

வெளிநாட்டில் சிக்கித் தவிப்பவர்களை மீட்க ரவிக்குமார் வைத்த கோரிக்கையை வெளியுறவுத் துறை அமைச்சகம் ஏற்று நடவடிக்கை எடுத்துள்ளது.

Samayam Tamil 19 Jun 2020, 7:41 am
கொரோனா வைரஸ் பரவலால் உலகமே ஸ்தம்பித்துள்ள நிலையில் அனைத்து நாடுகளைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு என பல்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு மாநிலங்களுக்கு நாடுகளுக்குச் சென்றவர்களின் நிலைமைதான் மிக மோசமாக உள்ளது.
Samayam Tamil ravikumar


ஒரு பக்கம் கொரோனா அச்சம் என்றால், மற்றொரு பக்கம் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல், சொந்த நாட்டுக்கு திரும்ப வழியில்லாமல் தவிப்பது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அந்தந்த மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எந்தெந்த இடங்களில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதைக் கேட்டறிந்து மத்திய அரசு மூலம் அவர்களை மீட்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்துவருகின்றன.

தமிழ்நாட்டில் மாநில அரசு இதை செய்யும் என நினைத்துக் கொண்டிருக்காமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் வெளியுறவுத் துறையை நாடி வெளிநாட்டில் சிக்கித் தவித்தவர்களின் துயரையும், அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினரின் துயரையும் துடைத்துள்ளார்.

கொரோனா: இந்த ஊரடங்கில் நிலைமை கட்டுக்குள் வருமா?

மேலும் இதுகுறித்து வெளியுறவு அமைச்சகத்துக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட பதிவு ஒன்றில், “சவுதி அரேபியாவில் பணியாற்றிவந்த மோகன் செல்வராஜ் என்பவர் அங்கு மரணமடைந்துவிட்டார். அவரது உடலை இங்கு கொண்டுவர உதவவேண்டும் என அவரது உறவினர்கள் கேட்டனர். வெளியுறவு அமைச்சகத்துக்கு கடந்த 15.06.2020 அன்று கடிதம் எழுதினேன். அன்றிரவே அதுகுறித்து சவுதி அரேபியாவில் உள்ள தூதரகத்திலிருந்து பதில் வந்துவிட்டது.



விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்த் என்பவர் ரஷ்யாவில் மருத்துவம் பயில்கிறார். அவர் ஜூன் 20 ஆம் தேதி இந்தியா வரும் விமானத்தில் இடம் கிடைக்க உதவ வேண்டும் எனக் கேட்டார். 17.06.2020 அன்று வெளியுறவு அமைச்சகத்துக்குக் கடிதம் அனுப்பினேன். அன்றைய தினமே அவருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டதாக லட்சுமிகாந்த் தகவல் அனுப்பியுள்ளார்.

’இன்றைய தமிழகம்’ - பல்வேறு முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...!

சீனாவுடனான எல்லைப் பிரச்சனை போராக மாறுமோ என்ற பதற்றமான நிலையிலும் வெளியுறவு அமைச்சகம் எனது கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து தீர்த்து வைத்தது பாராட்டுக்குரியது. வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர் அவர்களுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி