ஆப்நகரம்

நாங்குநேரியில் எம்.பி. வசந்தகுமார் கைது!

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் எச்.வசந்தகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 21 Oct 2019, 3:59 pm
நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்த எச்.வசந்தகுமார், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக ராஜினாமா செய்தார். அதனால் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியாக இருந்தநிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று வாக்குபதிவு நடைபெற்றுவருகிறது.
Samayam Tamil Untitled collage (13)


விறு விறு வாக்குபதிவு: வேகம் குறையாத பணபட்டுவாடா!

நாங்குநேரியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் தொகுதியைச் சாராதவர்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாங்குநேரி கலங்குடி என்ற இடத்தில் அனுமதியின்றி நுழைந்ததாகக் கூறி எச்.வசந்தகுமார் அவருடன் வந்த நான்கு பேரை காவல்துறையினர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இடைத்தேர்தல்: மழையால் தேர்தல் நேரம் நீட்டிக்கப்படுமா..?

பாளையங்கோட்டையிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் தனது தொகுதியை பார்க்க வந்ததாக வசந்தகுமார் தரப்பில் கூறப்பட்டது. அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வசந்தகுமார் கேட்டுக்கொண்டதன் பேரில் கலைந்து சென்றனர்.

புதுச்சேரி: போட்டி போட்டு முறைகேட்டில் ஈடுபடும் காங்கிரஸ், என்.ஆர் காங்கிரஸ்!

விசாரணையைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வசந்தகுமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி