ஆப்நகரம்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தலையிட எம்.பி கனிமொழி வலியுறுத்தல்

காவிரி தண்ணீர் பிரச்சனையால் கர்நாடக, தமிழக மக்கள் வன்முறையை தவிர்த்து அமைதி காக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

TNN 13 Sep 2016, 2:27 pm
திருச்சி: காவிரி தண்ணீர் பிரச்சனையால் கர்நாடக, தமிழக மக்கள் வன்முறையை தவிர்த்து அமைதி காக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil mp kanimozhi on cauvery water issue
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தலையிட எம்.பி கனிமொழி வலியுறுத்தல்


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி கனிமொழி, காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் நடக்கும் வன்முறை சம்பவங்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கவும், அமைதி நிலவவும், காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும் மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனிடையே, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக மூத்த தலைவர் துரைமுருகன், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மந்தமாக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி