ஆப்நகரம்

பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை - குழப்பத்தை ஏற்படுத்தும் எஸ்ஆர்பி!

பாஜக கூட்டணியில் தற்போது அதிமுக இல்லை எனவும், தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து பேசிக் கொள்ளலாம் என்றும் அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறியுள்ள கருத்து, தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 21 Sep 2020, 8:00 pm
மத்திய வேளாண் மசோதாக்கள் மீது நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது, அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் மசோதாவை ஆதரித்து பேசினார். அதேசமயம், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான எஸ்.ஆர் .பாலசுப்ரமணியம் இந்த மசோதாக்களில் குறைகள் உள்ளதாகக் கூறி, அதனை சுட்டிக்காட்டி பேசினார்.
Samayam Tamil srb


வேளாண் மசோதாக்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்ட பிறகு, அதிமுக எம்.பி. ஒருவரே மசோதாவுக்கு எதிராக அவையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, " ஓ.பி.ரவீந்திரநாத் அவைக்கு புதிய உறுப்பினர். அவருக்கு அனுபவம் போதாது. அவர் ஆதரிக்கிறார் என்பதற்காகவே, நானும் இந்த மசோதாவை ஆதரிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

நாங்க ஒண்ணும் அந்த அம்மாவால அமைச்சர் ஆகல.... ஜெயக்குமார் கோபம்!

தங்களது கருத்துக்களை கூற, ஒவ்வொரு உறுப்பினருக்கும் உரிமையுள்ளது. அதனடிப்படையில்தான், வேளாண் மசோதாக்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி மாநிலங்களவையில் பேசினேன். இவ்வாறு பேசியதால் எனக்கு எந்த பயனும் இல்லை. குறைகளை தான் சுட்டிக்காட்டினேன் தவிர மசோதாவை எதிர்த்து வாக்களிக்கவில்லையே?" என்று எஸ்ஆர்பி கூறினார்.

கூட்டணி இல்லை: அதிமுக -பாஜக கூட்டணி குறித்து அவர் கூறும்போது, " பாஜக கூட்டணியில் தற்போது அதிமுக இல்லை. இல்லாத கூட்டணியை யாரும் உருவாக்க வேண்டாம். தேர்தல் வரும்போது கூட்டணி பற்றி பேசிக் கொள்ளலாம். பாஜகவின் திட்டங்களால் தமிழகத்தில் அதிமுகவின் வெற்றி பாதிக்காது.

மோடி நல்லவர், பெரியார் கெட்டவர்... பிரபல நடிகர் சர்ச்சை பேச்சு!!

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, அதிமுகவே மீண்டும் ஆட்சியை அமைக்கும். ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது" என்று எஸ்ஆர் பாலசுப்ரமணியம் அதிரடியாக கூறியுள்ளார்.

அதிமுகவுடனான கூட்டணி தொடர்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறிவரும் நிலையில், கூட்டணி குறித்த எஸ்.ஆர். பாலசுப்ரமணியத்தின் இந்தக் கருத்து, தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி