ஆப்நகரம்

கரூரை தாண்டமுடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் வார்னிங்!

பாஜக தலைவர் அண்ணாமலை கரூரை தாண்ட முடியாது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Samayam Tamil 23 May 2022, 11:03 am
திமுக அரசின் ஒரு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் நடைபெற்றது. அந்தந்தப் பகுதி அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு மக்களிடையே பேசினர்.
Samayam Tamil mrk panneerselvam annamalai


அந்த வகையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கடைவீதியில் திமுக அரசின் ஒரு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று (மே 22) இரவு நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "தமிழ்நாட்டில் பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம், நகைக் கடன் தள்ளுபடி, நெகிழி பயன்பாட்டை குறைக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தொடரும் 4 ஆண்டுகளும் மக்களுக்கு பயன்பெறும் வகையில் தமிழக அரசின் சாதனை திட்டங்கள் தொடரும்" என்று கூறினார்.

ஸ்டாலின் போடும் கணக்கு: வெங்கையாவை அழைத்து வரும் பின்னணி என்ன?

72 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை எனில் கோட்டையை முற்றுகையிடுவோம் என்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். அண்ணாமலையின் பேச்சு தொடர்பாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விமர்சித்து பேசினார்.
இலங்கையின் நிலைக்கு இவரா காரணம்? குறி சொல்பவரை குறி வைத்த போராட்டக்காரர்கள்!
"இது திமுக ஆட்சி. சொன்னதை செய்து காட்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உங்களது மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது. கர்நாடகாவில் இருந்து காவிரி நீரைத் தமிழகத்துக்கு கொடுக்கக் கூடாது என பேசியவர் அண்ணாமலை. இவர் தமிழகத்துக்கு என்ன செய்யப் போகிறார்? மதக்கலவரத்தை உருவாக்க பார்க்கிறார். இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. சவாலுக்கு பயப்பட மாட்டோம். அண்ணாமலை சொந்த ஊரான கரூர் மாவட்டத்தையே தாண்ட முடியாது” என்று பேசினார்.

அடுத்த செய்தி