ஆப்நகரம்

தமிழில் தேர்வெழுத தடை ஏதும் விதிக்கப்படக் கூடாது: கி. வீரமணி!

தமிழில் தேர்வெழுதும் மாணவர்களுக்குத் தடை ஏதும் விதிக்க கூடாது என்று கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.

Samayam Tamil 15 Oct 2018, 4:57 pm
மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழில் தேர்வெழுதும் மாணவர்களுக்குத் தடை ஏதும் விதிக்க கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.
Samayam Tamil தமிழில் தேர்வெழுத தடை ஏதும் விதிக்கப்படக் கூடாது: கி. வீரமணி!
தமிழில் தேர்வெழுத தடை ஏதும் விதிக்கப்படக் கூடாது: கி. வீரமணி!


மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர்களிடம் கலந்து பேசாமல் திடீரென்று, தமிழில் தேர்வெழுத இருந்த அனுமதியை ரத்து செய்தது.

இதை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது, காவல்துறையினர் எந்தவித முன் அறிவிப்புமின்றி மீது தடியடி நடத்திய சம்பவம் மாநிலம் முழுவதும் உள்ள கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறையினர் குறிப்பாக அமைச்சர், கல்விச் செயலாளர் இதில் உடனடிக் கவனம் செலுத்தி, தேவைப்பட்டால் புதிய ஆணை ஒன்றை நிறைவேற்றி முதல் தலைமுறை, கிராமப்புற மாணவர்கள், தமிழில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் படித்து பட்டதாரிகளாக விரும்பும் மாணவச் செல்வங்களுக்கு அந்த உரிமையை வழங்க வேண்டும். தமிழில் எழுத முயலும் மாணவர்களுக்குத் தடை ஏதும் விதிக்கப்படக் கூடாது.

இல்லையேல், நாடு தழுவிய கிளர்ச்சி வெடிப்பது தவிர்க்க முடியாதது. தாமதம் இன்றி தமிழக அரசு இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி