ஆப்நகரம்

முடிச்சூர் பகுதியில் வெள்ளம்: பீதியுடன் வெளியேறும் மக்கள்!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முடிச்சூர் பகுதியில் ஒரு நாள் மழைக்கே வெள்ளம் ஏற்பட்டு மழை நீர் வடிந்து செல்ல வழி இல்லாமல் தேங்கி நிற்பதால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

TOI Contributor 31 Oct 2017, 1:02 pm
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முடிச்சூர் பகுதியில் ஒரு நாள் மழைக்கே வெள்ளம் ஏற்பட்டு மழை நீர் வடிந்து செல்ல வழி இல்லாமல் தேங்கி நிற்பதால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
Samayam Tamil mudichur is flooded in rain water people are vacating their homes
முடிச்சூர் பகுதியில் வெள்ளம்: பீதியுடன் வெளியேறும் மக்கள்!!


கடந்த 2015ஆம் ஆண்டில் மழை பெய்தபோதும் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி முடிச்சூர். இந்தப் பகுதி குடியிருப்புப் பகுதிக்குள் சில மணி நேரங்களில் வெள்ளம் புகுந்து மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். அதே நிலைதான் தற்போதும் எழுந்துள்ளது.

இந்தப் பகுதியில் நேற்று முதல் பெய்து வரும் மழையால் நீர் செல்ல வழி இல்லாமல் சாலைகள் மற்றும் குடியுருப்புப் பகுதிகளில் நீர் தேங்கி நிற்கிறது. முடிச்சூரில் பகுதியில் உள்ள லட்சுமி நகர், வரதராஜபுரம் பகுதி வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதால் அந்தப் பகுதி மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி வருகின்றனர். 2015ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தை இன்னும் இப்பகுதி மக்கள் மறக்கவில்லை. அதற்குள் மற்றுமொரு வெள்ளத்தை சந்தித்து வருகின்றனர். இன்னும் 4 நாட்களுக்கு கன மழை இருக்கும் நிலையில் தமிழக அரசு நிலைமையை சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரண்டு ஆண்டுகள் ஆகியும் அரசும் இந்தப் பகுதியில் எந்தப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை என்பது இதில் இருந்து தெரிய வருகிறது. இப்பகுதி மக்கள் பீதியில் வெளியேறி வருகின்றனர்.

Mudichur is flooded in rain water: people are vacating their homes

அடுத்த செய்தி