மவுலிவாக்கத்தில் இடிந்த கட்டடத்தின் அருகே உள்ள கட்டிடத்தை உடனடியாக இடிக்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 28 ந் தேதியன்று சென்னை மவுலிவாக்கத்தில் கட்டப்பட்ட 11 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் உயிரிழந்தனர் . 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனையடுத்து தமிழக அரசு இடிந்த கட்டடித்திற்கு அருகில் இருந்த மற்றொரு கட்டிடத்தையும் பாதுக்காப்பு குறைவாக இருப்பதால் அதையும் இடிக்க உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கட்டிட உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.அப்போது தனி நபர் நீதிமன்றம் அனைத்து சாட்சியங்களிடமும் மீண்டும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. . இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவ கீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது . தமிழக அரசு சார்பில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜரானார்.மவுலிவாக்கம் இரண்டாவது கட்டிடத்தை உடனடியாக இடிக்க உத்தரவிட வேண்டும் என கேட்குக்கொண்டார். பின்னர் எதிர்மனு தாரர் பதில் மனுவை வெள்ளிக்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டதோடு வழக்கின் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 28 ந் தேதியன்று சென்னை மவுலிவாக்கத்தில் கட்டப்பட்ட 11 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் உயிரிழந்தனர் . 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனையடுத்து தமிழக அரசு இடிந்த கட்டடித்திற்கு அருகில் இருந்த மற்றொரு கட்டிடத்தையும் பாதுக்காப்பு குறைவாக இருப்பதால் அதையும் இடிக்க உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கட்டிட உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.அப்போது தனி நபர் நீதிமன்றம் அனைத்து சாட்சியங்களிடமும் மீண்டும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. . இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவ கீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது . தமிழக அரசு சார்பில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜரானார்.மவுலிவாக்கம் இரண்டாவது கட்டிடத்தை உடனடியாக இடிக்க உத்தரவிட வேண்டும் என கேட்குக்கொண்டார். பின்னர் எதிர்மனு தாரர் பதில் மனுவை வெள்ளிக்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டதோடு வழக்கின் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.