ஆப்நகரம்

முகிலனை நாளை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு

நெஞ்சு வலி காரணமாக சென்னை ஸ்டேன்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமூக செயற்பாட்டாளர் முகிலன் சிகிச்சை முடிவடைந்த நிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Samayam Tamil 9 Jul 2019, 4:42 pm
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன் பாலியல் புகாரில் நாளை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி ரவி உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil Mugilan 1.


5 மாதங்கள் மாயமான நிலையில், சமூக செயற்பாட்டாளர் முகிலன் ஆந்திரா மாநிலம் திருப்பதியில் ரயில் மறியலில் ஈடுபட்டபோது ஆந்திரா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அந்திராவில் கைது செய்யப்பட்ட முகிலன் தமிழக சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டார்.

முகிலனிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், ஏற்கனவே முகிலன் மீது அளிக்கப்பட்டிருந்த பாலியல் புகாரில் முகிலனை சிறையில் அடைக்க காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக அவர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், தனக்கு நெஞ்சு வலிப்பதாக முகிலன் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று சிகிச்சை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து முகிலன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். கூடவே முகிலனுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

முகிலன் மீதான பாலியல் புகார் குறித்து கரூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவரை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி ரவி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் முகிலன் நாளை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

அடுத்த செய்தி