வார்தா புயல் மீட்புப் பணிகளின் ஒரு பகுதியாக சென்னை நகர தெருக்களில் கொசு மருந்து அடிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
கடந்த 12-ஆம் தேதி வார்தா புயல் கரையைக் கடந்ததால்,சென்னை,திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்தன.ஆயிரக்கணக்கான மரங்களும்,மின் கம்பங்களும் சேதமடைந்தன.
இதனை தொடர்ந்து முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணிகளும்,மின்சார இணைப்பு அளிக்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.இந்த பணிகள் ஓரளவுக்கு நிறைவடைந்ததை தொடர்ந்து,நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்கவும்,கொசுக்கள் பெருகாமல் இருக்கவும் கொசு மருந்து அடிக்கும் பணிகள் சென்னை முழுவதும் துவங்கியுள்ளது.
இதற்காக அளிக்கப்பட்டுள்ள பிரத்யேக இயந்திரத்தின் மூலம் ,நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு ஊழியர்கள் சென்னையின் அனைத்து தெருக்களிலும் ,குடியிருப்பு பகுதிகளிலும் கொசு மருந்தடிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
Municipal Workers fumigates a residental areas in Chennai
கடந்த 12-ஆம் தேதி வார்தா புயல் கரையைக் கடந்ததால்,சென்னை,திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்தன.ஆயிரக்கணக்கான மரங்களும்,மின் கம்பங்களும் சேதமடைந்தன.
இதனை தொடர்ந்து முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணிகளும்,மின்சார இணைப்பு அளிக்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.இந்த பணிகள் ஓரளவுக்கு நிறைவடைந்ததை தொடர்ந்து,நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்கவும்,கொசுக்கள் பெருகாமல் இருக்கவும் கொசு மருந்து அடிக்கும் பணிகள் சென்னை முழுவதும் துவங்கியுள்ளது.
இதற்காக அளிக்கப்பட்டுள்ள பிரத்யேக இயந்திரத்தின் மூலம் ,நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு ஊழியர்கள் சென்னையின் அனைத்து தெருக்களிலும் ,குடியிருப்பு பகுதிகளிலும் கொசு மருந்தடிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
Municipal Workers fumigates a residental areas in Chennai