ஆப்நகரம்

ராஜீவ் கொலை குற்றவாளி முருகனுக்கு மருத்துவ பரிசோதனை

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகனுக்கு வேலூர் சிறையில் மருத்துவக் குழுவினர் இன்று மருத்துவ பரிசோதனை செய்தனர்

TNN 18 Mar 2016, 4:51 pm
வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகனுக்கு வேலூர் சிறையில் மருத்துவக் குழுவினர், இன்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.
Samayam Tamil murugan convict in rajiv gandhi assassination case undergoes general check up
ராஜீவ் கொலை குற்றவாளி முருகனுக்கு மருத்துவ பரிசோதனை


இன்று வேலூர் சிறை வளாகத்திலேயே இந்த மருத்துவ பரிசோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. முருகனுக்கு நடந்த பொதுவான மருத்துவ பரிசோதனையில் ஆறு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் இருந்ததாக கூறப்படுகிறது.

Murugan, convict in Rajiv Gandhi assassination case undergoes general check up with 6 member doctor crew inside Vellore (TN) central prison.— ANI (@ANI_news) March 18, 2016

நேற்று, முருகனின் மனைவியும், ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியுமான நளினிக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடைபெற்றது. வேலூர் அரசு மருத்துவ கல்லூரியில் இருதயம் மற்றும் நரம்பியல் பிரச்சனை தொடர்பாக நளினிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

அடுத்த செய்தி