ஆப்நகரம்

'ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்படும் புதுச்சேரி ஆளுநரை மாற்றுக': முத்தரசன்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மாற்ற வேண்டும் என்ற குரலை மத்திய அரசு செவிமடுத்து கேட்க வேண்டும் என்று முத்தரசன் பேட்டி.

Samayam Tamil 9 Jan 2021, 7:32 pm
புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு எதிராக செயல்படும் ஆளுநர் கிரண்பேடியை திரும்பபெற வலியுறுத்தி இன்று இரண்டாவது நாளாக காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil cpi mutharasan


இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தபோது, '' இது தனிப்பட்ட நபரை எதிர்த்து நடத்தும் போராட்டம் அல்ல.

ஆளுநர் கிரண்பேடி சட்டத்திற்கு புறம்பாக ஜனநாயகத்திற்கு விரோதமாக, அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக, புதுச்சேரி மாநில மக்களுக்கு எதிராக தேவையற்ற போரை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக நடத்தி வருகின்றார்.

புதுச்சேரி மாநில மக்களுக்கு சட்டபூர்வமான சலுகைகளை வழங்குவதற்கு, நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ஆளுநரால் தடுத்து நிறுத்தப்படுகின்றது.

ஆகவே மக்கள் விரோதி துணை நிலை ஆளுநரை புதுச்சேரி மாநிலத்திலிருந்து மாற்ற வேண்டும் அவரை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும் என்ற வகையில் ஜனநாயக ரீதியாக இந்த போராட்டம் நடைபெறுகின்றது. இந்த கோரிக்கையை மத்திய அரசு செவிமடுத்து கேட்டு ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெற வேண்டும்'' என முத்தரசன் வலியுறுத்தினார்.

அடுத்த செய்தி