ஆப்நகரம்

மகப்பேறு நிதி முறைகேடு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!

மகப்பேறு கால நிதி உதவியை பயனாளிகளுக்கு முறையாக வழங்காத செவிலியர் மீது நடவடிக்கை கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 26 Dec 2019, 8:57 am
நகர்ப்புறம், கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு பேறுகாலத்தின்போது ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடு செய்யவும், அவர்கள் சத்தான உணவுகளை உண்ண வழிவகை செய்யவும் தமிழ்நாடு அரசு சார்பில் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் 12 ஆயிரம் ரூபாய், 3 தவணைகளில் ரூ.4 ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது.
Samayam Tamil மகப்பேறு நிதி முறைகேடு


அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெறும் பிரசவங்களுக்கே இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. ஆனால் பயனாளிகளுக்கு வழங்கப்படவேண்டிய இந்த தொகையை செவிலியர்கள் முறையாக வழங்குவதில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சோ்ந்த அமலா, ரேகா, சோ்மக்கனி உள்ளிட்ட பலா் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

உள்ளாட்சித் தேர்தல்: முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் ஓய்ந்தது

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் இந்த நிதி முறையாக வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த தொகையை அங்கு பணிபுரிந்து வரும் செவிலியா் ஆா்.சுமதி வழங்காமல் தொடா்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளாா். இந்த முறைகேடு குறித்து பாதிக்கப்பட்டவா்கள் சாா்பில் சுகாதாரத்துறை இயக்குநரிடம் புகாா் அளிக்கப்பட்டது.

பட்டத்தை வாங்கிய பிறகு மாணவி கொடுத்த அதிர்ச்சி..! ஸ்தம்பித்த அரங்கம்...

ஆனால் அந்தப் புகாரின் மீது சுகாதாரத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவும், மகப்பேறு கால உதவித்தொகையை வழங்கவும் உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

மோடிக்குக் கோயில், பழனிசாமி படத்திற்குப் பொட்டு அசர வைத்த பாஜக தொண்டர்!

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை இயக்குநரும், செவிலியர் சுமதியும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

அடுத்த செய்தி