ஆப்நகரம்

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: ராகுல், கெஜ்ரிவால் பங்கேற்பு

பிகாரில் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்துக்கு எதிராக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி, நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ராகுல், அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றனர்.

Samayam Tamil 4 Aug 2018, 9:15 pm
பிகாரில் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்துக்கு எதிராக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி, நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ராகுல், அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றனர்.
Samayam Tamil rahulgandhi-7591


பிகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஆய்வு செய்த போது, சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து பிகார் மாநில அரசு சார்பில் இந்த வழக்கை விசாரிக்க விசாரணை ஆணையம் அமைத்தது. ஆனால், எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்ததால், இவ்வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், காப்பக சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தை கண்டித்து பிகார் எதிர்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி, டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றனர்.

அடுத்த செய்தி