ஆப்நகரம்

''கட்சித் தலைவர் என் கன்னத்தில் அறைந்தார்'': எம்.பி., சிவாவை அறைந்த சசிகலா புஷ்பா கதறல்

'' கட்சித் தலைவர் என் கன்னத்தில் அறைந்தார்'' என்று மாநிலங்களவையில் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா அழுது கொண்டே கூறினார்.

TOI Contributor 1 Aug 2016, 3:27 pm
'' கட்சித் தலைவர் என் கன்னத்தில் அறைந்தார்'' என்று மாநிலங்களவையில் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா அழுது கொண்டே கூறினார்.
Samayam Tamil my leader slapped me expelled aiadmk mp pushpa sasikala breaks down in rs
''கட்சித் தலைவர் என் கன்னத்தில் அறைந்தார்'': எம்.பி., சிவாவை அறைந்த சசிகலா புஷ்பா கதறல்


டில்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவை கடந்த சனிக் கிழமை மாலை சசிகலா புஷ்பா கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்று வந்தது. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று புஷ்பா சசிகலாவை போயஸ்கார்டனுக்கு அழைத்து விசாரித்தார். அப்போது புஷ்பாவை ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்தியதாக தகவல் வெளியானது. சிவாவும் திமுக தலைவர் கருணாதியை சந்தித்து விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் இன்று காலை ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா பேச துவங்கினார். அவர் பேசுகையில், ''நான் திருச்சி சிவாவை கன்னத்தில் உணர்ச்சி வசப்பட்டு அறைந்துவிட்டேன். இதற்காக நான் சிவாவிடமும், அவரது கட்சி தலைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன். மேலும் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டு இருந்தார்.

எனது கட்சித் தலைவரால் நான் நேற்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டேன். நானும், எனது கணவர், குழந்தைகளுடன் சென்றேன். எனது தரப்பு நியாயத்தைக் கூற அனுமதி தரவில்லை.

மேலும் கட்சி தலைவர் எனது கன்னத்தில் அறைந்தார். எனது பதவியை ராஜினாமா செய்யுமாறு நிர்பந்தம் செய்கின்றனர். நான் ராஜினாமா செய்ய மாட்டேன், நான் ராஜினாமா செய்ய முடியாது'' என்று கூறினார்.

இவரது பேச்சால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. இவர் அவையில் பேசிக் கொண்டு இருக்கும்போதே கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புக்களிலும் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.

அடுத்த செய்தி