ஆப்நகரம்

நெல்லை: காவலரை அடித்துக் கொன்ற மணல் கொள்ளையா்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்திக் கொண்டு இருந்த காவலா் ஜெகதீஷ் கொள்ளையா்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 7 May 2018, 9:59 am
திருநெல்வேலி மாவட்டத்தில் மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்திக் கொண்டு இருந்த காவலா் ஜெகதீஷ் கொள்ளையா்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil TVL Police.


திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவா் ஜெகதீஷ். நேற்று இரவு பரப்பாடி அருகே மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்திக் கொண்டு இருந்தாா். இந்நிலையில் அவா் இன்று அதிகாலை மா்மமான முறையில் தலையில் காயத்துடன் இறந்து கிடந்தாா்.

இது தொடா்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், நம்பியாற்றில் தொடா்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. மணல் கொள்ளையா்கள் தான் காவலரை அடித்துக் கொலை செய்துள்ளனா் என்று குற்றம் சாட்டியுள்ளனா். காவல் துறையினா் இது தொடா்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அடுத்த செய்தி