ஆப்நகரம்

திருவள்ளூரில் மர்மப் பொருள் வெடித்து சாமியார் பலி.! பூஜையின் போது நேர்ந்த கொடுமை..

திருவள்ளூர் அருகே வீட்டில் பூஜை செய்து கொண்டிருந்தபோது மர்மப் பொருள் வெடித்து சாமியார் பலியானதை அடுத்து தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Samayam Tamil 26 Sep 2019, 4:44 pm
திருவள்ளூர் மாவட்டம் இறையாமங்கலம் பகுதியில் வசித்து வந்தவர் சாமியார் கோவிந்தரா ஜ். இவர் சித்த வைத்தியம்,ஜோதிடமும் தெரிந்தவர். சென்னை நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஒரு ஏக்கர் இடம் வாங்கி அதில் ஒரு வீடு கட்டி வசித்து வந்தார். திருமணம் ஆகாத இவர் தனது தாயை நங்கநல்லுர் வீட்டில் விட்டுவிட்டு தனிமையில் வசித்து வந்துள்ளார்.
Samayam Tamil 3



இந்நிலையில் சாமியார் கோவிந்தராஜ் தான் வசித்த பகுதிகளில் சித்தவைத்தியம், ஜோதிடம், சம்பிரதாய பூஜை செய்வது மற்றும் யோகா என பல்வேறு வித்தைகளில் பிரசித்தி பெற்றவர் என தெரிகிறது. இதனால் நங்கநல்லூர் மற்றும் இறையமங்கலத்தை சேர்ந்தவர்கள் சாமியாரை அவ்வப்போது சந்தித்து செல்வதுண்டு.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை லாவண்யா என்ற பெண் கோவிந்தராஜ் வீட்டில் வந்து தங்கியுள்ளார். அன்று இரவு பூஜை செய்து கொண்டிருந்த போது திடீரென வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. அப்போது பக்கத்து அறையில் இருந்ததாக கூறப்படும் லாவண்யா ஓடி வந்து பார்த்த போது கோவிந்தராஜ் பலத்த தீக்காயங்களுடன் வீட்டின் வெளியே ஓடி வந்துள்ளார்.

சாமியாரின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் விபத்து குறித்து மப்பேடு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக கோவிந்தராஜை காரில் ஏற்ற முயன்ற போது மயங்கி விழுந்து இறந்துள்ளார்.

தீவிபத்தில் உயிரிழந்த கோவிந்தராஜின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு சாமியாரின் வீட்டில் தடய அறிவியல் நிபுணர் பிரிவு காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சாமியார் உடலில் இருந்து ரத்தம் வெளியேறி சுவற்றில் படிந்து இருப்பதால் எந்த மாதிரியான பொருள் வெடித்திருக்கும் என்ற தகவல் சோதனை முடிவுக்குப் பிறகே தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவிந்தராஜின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசாரும் விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி