ஆப்நகரம்

மர்ம காரால் அப்பல்லோவில் பரபரப்பு!!

மர்ம சொகுசு கார் ஒன்றால் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

TNN 15 Oct 2016, 5:22 pm
சென்னை: மர்ம சொகுசு கார் ஒன்றால் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil mystery car creates commotion in apollo hospital
மர்ம காரால் அப்பல்லோவில் பரபரப்பு!!


கடந்த மாதம் 22-ம் தேதியன்று இரவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதல்வர் அனுமதிக்கப்பட்ட நாள் முதலே அப்பல்லோ மருத்துவமனை வட்டாரத்தில் அதிமுக மூத்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை குவிந்துள்ளனர். எனவே, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வர் சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு மர்ம கார் ஒன்று வந்ததால் அங்கு சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் என பலகை வைத்த இனேவா கார் ஒன்று மருத்துவமனைக்குள் செல்ல முயன்றுள்ளது. அப்போது, அங்கு பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள போலீசார் அக்காரை தடுத்து நிறுத்தி விசாரித்ததில் ஓட்டுனர் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால், அந்த காரை பறிமுதல் செய்த போலீசார், அருகில் உள்ள ஆயிரம் விளக்கு காவல் நிலையம் அழைத்து சென்று ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில், அந்த கார் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவரின் கார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ஓட்டுனரையும், காரையும் போலீசார் விடுவித்துள்ளனர். இச் சம்பவத்தால் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Mystery car creates Commotion in Apollo hospital #JayaHealth

அடுத்த செய்தி