ஆப்நகரம்

தலை மீது மர்ம நபர் செருப்பு வைத்ததால் ’ஓவென்று’ கத்திய ஆட்சியர் ரோகிணி

சேலத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், அம்மாவட்ட ஆட்சியர் ரோகிணி தலையில் ஒருவர் செருப்பு வைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Samayam Tamil 30 Apr 2018, 4:15 pm
சேலத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், அம்மாவட்ட ஆட்சியர் ரோகிணி தலையில் ஒருவர் செருப்பு வைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Samayam Tamil do
ஆட்சியர் ரோகிணி தலையில் செருப்பு வைத்த மர்ம நபர்


சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆட்சியர் ரோகிணியிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.

மனுவை அவர் படித்துக்கொண்டு இருந்த போது, மனு அளித்த அந்த நபர் தன் காலில் போட்டிருந்த செருப்பை கழற்றி ஆட்சியர் ரோகிணி தலையில் வைக்க முயன்றதாக தெரிகிறது.

ஆட்சியர் ரோகிணி தலையில் செருப்பு வைத்த மர்ம நபர்



இதை பார்த்து அதிர்ந்த ஆட்சியர் ரோகிணி ஓவென்று கத்தியடி அங்கிருந்து ஓடினார். உடனே அந்த நபர் செருப்பை மாவட்ட வருவாய் அதிகாரி தலையில் வைத்தார். இதனால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பிறகு அங்கியிருந்த ஆட்சியர் அலுவலர்கள், அந்த நபரை மடக்கிப்பிடித்து, வரை சேலம் நகர காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் அந்த நபர் தன்னை மருத்துவர் என்று கூறிக்கொண்டார்.

இதனால் அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நபராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து அந்த மர்ம நபரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி