ஆப்நகரம்

ரஞ்சன் கோகாய்க்கு எம்.பி. பதவி: கொந்தளித்த சீமான்

ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது நீதித்துறையின் சுதந்திர, சார்பற்ற தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் செயல் என சீமான் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 17 Mar 2020, 9:08 pm
சென்னை: ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil சீமான்
சீமான்


உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், வரலாற்றுச் சிறப்பு மிக்க அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கியவருமான ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், முன்னாள் நீதிபதிகளுக்கு ஓய்வுக்கு பின் பதவி. நீதித்துறையின் சுதந்திர, சார்பற்ற தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் செயல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராஜ்ய சபா எம்.பி. ஆகும் ரஞ்சன் கோகாய்... காரணம் என்ன?

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஞ்சன் கோகாயை மாநிலங்களவை உறுப்பினராக மத்திய அரசு நியமனம் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது எனவும், இது ஜனநாயகத்தின் மூன்று தூண்களில் ஒன்றான நீதித்துறையின் சுதந்திர தன்மையைக் கேள்விக்குள்ளாக்கிய கருப்பு நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டமன்றங்களும், பாராளுமன்றங்களும் எதேச்சதிகாரப்போக்கோடு செயல்படும் போதெல்லாம் மக்களின் குரலாகவும், சட்டத்தை நிலைநாட்டும் அரணாகவும் விளங்குபவை நீதிமன்றங்கள். அவற்றின் தன்னாட்சியுரிமையே இந்தியாவின் ஜனநாயகத்தை உயிர்ப்போடு வைத்திருக்கச் செய்கிறது. அத்தகைய நீதித்துறையின் நம்பகத்தன்மையைக் குலைத்து, மக்களின் நம்பிக்கையை முற்றிலும் சிதைக்கும் வகையில் அமைந்திருக்கிற இச்செயல் நீதித்துறைக்கு ஏற்பட்டிருக்கிற பெரும் இழுக்காகும்.

மத்திய அமைச்சருக்கு கொரோனவா? பரிசோதனை முடிவுகள் என்ன சொல்கிறது!

பதவியிலிருந்து இறங்கியதும் ஆளும் அரசால் நீதிபதிகளுக்கு வழங்கப்படும் ஆளுநர் பதவிகளும், மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளும் அவர்கள் நீதியரசர்களாக இருந்த பொழுது வழங்கப்பட்ட நீதியை கேள்விக்குறியாக்குகிறது. ஓய்வுபெற்ற பின் இப்பதவிகளைப் பெறுவதற்காக நீதிபதிகள் இனி அரசின் ஊதுகுழலாக மாற இந்த நியமனம் கேடான முன்னுதாரணமாக அமைந்துவிட்டது. இதன்மூலம் சனநாயகத்தின் அடித்தளமாக இருக்கிற நீதித்துறை‌யும் மத்தியில் ஆளும் பாசிச பாஜக அரசால் தன்வயப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பேராபத்தை உணர்ந்துகொள்ள வேண்டியதிருக்கிறது.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பெருங்கனவே எளியவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதிசெய்யும் மக்களாட்சித் தத்துவத்தைப் பேணிக் காப்பது தான்! அதனை முற்றிலும் சீர்குலைக்கும் விதமாக நீதித்துறையின் மாண்பையும், சார்பற்ற தன்மையையும் அதளபாதாளத்தில் குழிதோண்டிப் புதைத்த இச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி