ஆப்நகரம்

வாண்டடா வண்டி ஏறும் சீமான் - வச்சு செய்ய காத்திருக்கும் போலீசார்?

மத்திய அரசை சீமான் விமர்சனம் செய்துள்ளார்

Samayam Tamil 14 Mar 2022, 11:05 pm
மத்திய அரசு தான் செய்ய நினைக்கும் திட்டங்களை நீதிபதிகள் மூலமாக நிறைவேற்றி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டி உள்ளார்.
Samayam Tamil Seeman.


குறிஞ்சாங்குளத்தில் தமிழர் வழிபாட்டு உரிமை மீட்கப் போராடி உயிர் நீத்தவர்களுக்கு 30 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:
தமிழக அரசு காந்தாரியம்மன் கோயில் கட்ட உரிய நிலம் ஒதுக்கி வழிபாடு நடத்த வழிவகை செய்து தர வேண்டும். அதேபோல் மூத்த அரசியல் வாதியாக இருக்க கூடிய மதிமுக பொது செயலாளர் வைகோ இந்த பிரச்னையில் தலையிட்டால் நல்லது. அவரது சொந்த நிலத்தில் இந்த பிரச்னை இருப்பதால் அவர் தலையிடுவார் என நம்புகிறோம்.
கே.என்.நேருவுக்கு அண்ணாமலை திடீர் ஆதரவு - கடுப்பான ஸ்டாலின்!
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று கூறுபவர்கள் ஒரே குளத்தில் குளிக்கலாம். ஒரே சுடுகாட்டில் அனைவரையும் புதைக்கலாம் என்று சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். மேலும் இந்தியா ஒரே நாடு கிடையாது. Union of States தான் இந்தியா என்பதை அரசியலமைப்பு சாசனம் சொல்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர், குடியரசு தலைவருக்கு அனுப்ப மாட்டார். மத்திய அரசு அமல்படுத்த நினைக்கும் அனைத்தையும், நீதிமன்றம் எடுத்து சென்று நீதிபதிகள் உத்தரவு மூலம் செய்கிறது.
இவ்வாறு அவர் குற்றஞ்சாட்டினார்.

அடுத்த செய்தி