ஆப்நகரம்

'பஸ் வாங்குனதே எங்க காசுலதான் பரதேசி' - அமைச்சரை கிழித்த சீமான்

இலவச பேருந்து பயணம் குறித்து அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையான நிலையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் அதற்கு எதிர்வினையாற்றியுள்ளார்.

Samayam Tamil 29 Sep 2022, 6:53 pm
தமிழக அரசு கொண்டு வந்துள்ள பெண்கள் இலவச பேருந்து திட்டம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் பெண்கள், உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணிக்கலாம் என்று தமிழ அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil seeman


இந்த திட்டத்தின் மூலம் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் செல்வது தொகையான 1200 கோடி ரூபாயை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும் என்றும் அரசு தமது அரசாணையில் குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில், அண்மையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, இலவச பேருந்து திட்டம் மூலம் நீங்கள் ஓசியில் பயணம் செய்கிறீர்கள் என்று பேசினார்.

அது மிகுந்த சர்ச்சையானதை தொடர்ந்து பொன்முடிக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கோவை அரசு பேருந்தில் பயணித்த மூதாட்டி ஒருவர், எனக்கு ஓசி டிக்கெட் வேண்டாம் என்றும் காசு கொடுத்துதான் பயணிப்பேன் என கூறி நடத்துனரிடம் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பயணித்தார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பயங்கர வைரலாகியுள்ளது.


இந்நிலையில் அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு எதிர்வினையாற்றியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சீமான் பேசியதாவது, அவங்க அப்பன் பரம்பரை சொத்தில் பேருந்து வாங்கியதை போல 'ஓசி ஓசி' என கூறுகின்றனர். பஸ்ஸே எங்க காசுலதான் வாங்கி இருக்கீங்க பரதேசி'' என்று காட்டமாக பேசியுள்ளார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி