ஆப்நகரம்

காவி நிற கலாம் சிலைக்கு தமிழக அரசுதான் காரணம்.. சீமான்!

அப்துல் கலாம் நினைவிடத்தில் சிலை, பகவத் கீதை உள்ளிட்டவை காவி நிறத்தில் அமைக்கப்பட்டதற்கு தமிழக அரசு தான் காரணம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

TOI Contributor 30 Jul 2017, 9:56 pm
ராமநாதபுரம்: அப்துல் கலாம் நினைவிடத்தில் சிலை, பகவத் கீதை உள்ளிட்டவை காவி நிறத்தில் அமைக்கப்பட்டதற்கு தமிழக அரசு தான் காரணம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
Samayam Tamil naam thamizhar leader seeman has condemned bhagavad gita in kalam memorial
காவி நிற கலாம் சிலைக்கு தமிழக அரசுதான் காரணம்.. சீமான்!


ராமநாதபுரத்தில் ராமேஸ்வரம் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில் மத்திய அரசு மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டியுள்ளது. இதை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

அதில், அப்துல் கலாம் வீணை வாசிப்பது போல சிலை அமைத்துள்ளது. அதன் அருகில் பகவத் கீதை அமைக்கப்பட்டுள்ளது. இது அனைத்தும் காவி நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதுபெரும் சர்ச்சையாக வெடித்தது.

இந்நிலையில், முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற சீமான் கூறுகையில்,’ எல்லா மதத்தினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அப்துல் கலாம் நினைவிடத்தில் எல்லா மத நூல்களையும் வைத்திருக்கலாம். காவி நிறத்தில் கலாம் சிலை அமைத்துள்ளதற்கு தமிழக அரசு தான் காரணம். என்றார்.

Naam Thamizhar leader Seeman has condemned Bhagavad Gita in Kalam memorial.

அடுத்த செய்தி