ஆப்நகரம்

கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தும் திரையுலகம்

திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்த தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் முடிவு செய்து தேதி அறிவித்துள்ளது.

Samayam Tamil 11 Aug 2018, 5:37 pm
திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்த தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் முடிவு செய்து தேதி அறிவித்துள்ளது.
Samayam Tamil karunanidhi-meeting-cover-pic


தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமான கருணாநிதி கடந்த 7ம் தேதி சென்னையில் காலமானார்.

மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பலரும் அங்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் திரையுலகத்தினர் ருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்த திட்டமிட்டு அதற்கான தேதி அறிவித்துள்ளனர்.

அதற்காக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் கலை இலக்கிய திரைத்துறை பிதாமகனுமான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு திரை உலகம் ஆகஸ்டு 13ம் தேதி திங்கள் கிழமை மாலை 5 மணி முதல் சென்னை அண்ணாசலை, காமராஜர் அரங்கில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் திரைத்துறையை சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகளும், அதன் உறுப்பினர்களும் பங்கேற்குமாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளது.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையுலகத்தினர் சார்பில் நடத்தப்படும் இந்த நினைவேந்தல் கூட்டத்திற்கு ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம் உள்ளிட்ட முக்கிய நடிகர்களும், நயன்தாரா, சமந்தா, த்ரிஷா உள்ளிட்ட நடிகைகளும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி