ஆப்நகரம்

ஜெயலலிதா படத்தை காட்டி ஸ்டாலினிடம் கண்ணீர் வடித்த அதிமுக தொண்டர்கள்

நாகைக்கு சென்றிருந்த ஸ்டாலினிடம் அப்பகுதி மக்கள் ஜெயலலிதா புகைப்படத்துடன் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்து வீடியோ வைரலை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 19 Nov 2018, 2:38 am
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் சென்றிருந்த போது, அவரிடம் அதிமுக தொண்டர்கள் சிலர் ஜெயலலிதா புகைப்படத்தை காட்டி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த வீடியோ ஃபேஸ்புக்கில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
Samayam Tamil stalin_4


வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த கஜா புயல், தீவிர புயலாக உருமாறி மணிக்கு 120 கி.மீ வேகத்தில் வீசியது. பிறகு கடற்பகுதியிலிருந்து மெல்ல நகர்ந்து நாகப்பட்டினர் - வேதாரண்யம் இடையே கரையை கடந்தது.

தீவிரபுயலாகவே கஜா கரையை கடந்ததால், தரைப்பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டது. மனித உயிரிழப்புகள் 40-யை தாண்டியது. ஏராளமான விலங்கினங்கள், பறவைகள், மரங்கள், வயல்கள் அனைத்தும் புயலில் சிக்கி நாசமானது.

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினர் புதுக்கோட்டை ஆகியவை கஜா புயலால் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வர பொதுமக்களுக்கு பல ஆண்டுகள் ஆகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


சேதங்களை பார்வியட வரும் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் நகர் புரங்களை மட்டுமே பார்வையிட்டு செல்வதாகவும், உள் கிராமங்களுக்கு எந்த நிவாரணமும் வந்தடைவதில்லை என்றும் கிராம மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு ஆதரவு கூறுவதற்காக திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், நாகப்பட்டினம் சென்று வந்தார்.

அப்போது, ஸ்டாலின் சென்ற வாகனத்தை இடைமறித்த அதிமுக தொண்டர்கள், தங்களுக்கு இதுவரை எந்த நிவாரணமும் முழுமையாக வந்தடையவில்லை என்றும், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், உட்பட யாரும் இதுவரை வரவில்லை என்று ஸ்டாலினிடம் கதறி அழுகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி