ஆப்நகரம்

நாகூர் தர்காவின் 459வது சந்தனக்கூடு ஊர்வலம் தொடக்கம்

: நாகூர் தர்காவின் 459வது சந்தனக்கூடு ஊர்வலம் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக தொடங்கியது

TNN 19 Mar 2016, 10:17 pm
நாகப்பட்டினம்: நாகூர் தர்காவின் 459வது சந்தனக்கூடு ஊர்வலம் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக தொடங்கியது. நாகூர் தர்காவின் 459வது கந்தூரி திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
Samayam Tamil nagoor sandhanakoodu fest starts in nagapattinam
நாகூர் தர்காவின் 459வது சந்தனக்கூடு ஊர்வலம் தொடக்கம்


இதையடுத்து, 10 நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது.

சந்தன குடம் கண்ணாடி ஜரிகை மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட செட்டிபல்லாக்கில் வைக்கப்பட்டு ,நாகப்பட்டினம் தொட்டிபந்தலில் இருந்து நாகூர் தர்காவிற்கு அதிகாலை 4.00. மணிக்கும் வந்தடையும்.

தமிழகம் , பிற மாநிலம், துபாய், சிங்கப்பூர் , இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் விழாவைக் காண்பதற்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கக் நாகூர் தர்காவில் குவிந்துள்ளனர்.

அடுத்த செய்தி