ஆப்நகரம்

வேலூர் சிறைக்கு திரும்பினார் நளினி

தந்தையின் ஈம சடங்கில் பங்கேற்க ஒரு நாள் பரோல் வழங்கபட்ட நளினி, வேலூர் சிறைக்கு மீண்டும் திரும்பினார்.

TNN 9 Mar 2016, 8:47 pm
சென்னை: தந்தையின் ஈம சடங்கில் பங்கேற்க ஒரு நாள் பரோல் வழங்கபட்ட நளினி, வேலூர் சிறைக்கு மீண்டும் திரும்பினார்.
Samayam Tamil nalini get bact to vellore jail after finished her dad
வேலூர் சிறைக்கு திரும்பினார் நளினி


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி, அண்மையில் இறந்த அவரது தந்தை சங்கர நாராயணனின் உத்தர கிரியை சடங்கில் பங்கேற்க, மார்ச் 8, 9, 10 ஆகிய தேதிகளில் பரோலில் செல்ல அனுமதி கோரி, வேலூர் சிறைக் கண்காணிப்பாளரிடம் மனு அளித்திருந்தார்.

இது குறித்து அவரது வழக்கறிஞர் புகழேந்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தந்தையின் 16-ஆம் நாள் உத்தர கிரியை சடங்கில் பங்கேற்க நளினிக்கு ஒரு நாள் பரோல் வழங்கியது.

நேற்று மாலை 4 மணி முதல் இன்று மாலை 4 மணி வரை பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் தந்தை சங்கர நாராயணனின் ஈம சடங்கில் கலந்து கொண்டார். பின்னர் இன்று மதியம் 1 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மாலை 4 மணியளவில் வேலூர் சிறைக்கு நளினி திரும்பினார்.

அடுத்த செய்தி