ஆப்நகரம்

நளினி பரோல் மனு மீது நாளை விசாரணை

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, தனது தந்தையின் 16-ஆம் நாள் உத்தர கிரியை சடங்கில் பங்கேற்க அனுமதி கோரிய மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நாளை நடைபெறவுள்ளது.

TNN 7 Mar 2016, 8:46 pm
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, தனது தந்தையின் 16-ஆம் நாள் உத்தர கிரியை சடங்கில் பங்கேற்க அனுமதி கோரிய மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நாளை நடைபெறவுள்ளது.
Samayam Tamil nalini petition for barol to be heared tomorrow
நளினி பரோல் மனு மீது நாளை விசாரணை


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், வேலூர் பெண்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினியின் தந்தை சங்கர நாராயணன் அண்மையில் மரணமடைந்தார். இதுதொடர்பான 16-ஆம் நாள் உத்தர கிரியை சடங்கு வருகிற 9-ம் தேதி நடைபெறுகிறது.

அதில் பங்கேற்பதற்காக, மார்ச் 8, 9, 10 ஆகிய தேதிகளில் பரோலில் செல்ல அனுமதி கோரி, சிறைக் கண்காணிப்பாளரிடம் மனு அளித்திருந்தார்.

இந்த மனு மீதான நடவடிக்கையை சிறைத்துறை எடுக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சார்பில் பரோல் கோரி மனு ஒன்றை, அவரது வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை நடைபெறவுள்ளது.

அடுத்த செய்தி