ஆப்நகரம்

மீண்டும் ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா!

நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 24 Sep 2020, 5:11 am
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Samayam Tamil reddiarpatti


கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு 34 ஆயிரத்து 445 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் நாராயணன்.

கொரோனா பொது முடக்க காலத்தில் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளை மேற்கொண்டார். பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். பொது முடக்க காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான நல உதவிகளை செய்ததாக கூறப்படுகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா

54 வயதாகும் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் கொரோனா பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக கூறப்படுகிறது. இதையடுத்து கன்னியாகுமரிக்கு சென்று கொண்டிருந்த அவர், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உணர்ச்சி, சுரணையற்றவர் எடப்பாடி: ஸ்டாலின் கடும் தாக்கு!

ரெட்டியார் பட்டி நாராயணன் மீண்டும் விரைவாக குணமாகி மக்கள் பணியாற்றுவார் என அதிமுகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி