ஆப்நகரம்

சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட ரஜினி - நாஞ்சில் சம்பத் கணிப்பு என்ன?

கட்சி ஆரம்பித்தால் ரஜினிக்குத்தான் மிகப்பெரிய பாதகம் என்று நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 4 Dec 2020, 12:31 am
தமிழகத்தில் சட்ட சபை தேர்தல் நெருங்கி வருகிறது. அதே சமயம் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை குறித்த இறுதி முடிவும் எட்டியுள்ளது. ''அரசியலுக்கு வருவது உறுதி, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என 2017இல் கர்ஜித்த ராஜனினியின் அடுத்தடுத்த பேட்டியும், ஆலோசனைகளும் அவரது தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து வந்தது.
Samayam Tamil rajini


இந்நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அண்மையில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை மேற்கொண்டார். ஆனால் அப்போதும் தெளிவான முடிவை தெரிவிக்காத ரஜினி, இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், '' வரப்போகிற சட்ட மன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாக்குவது நிச்சயம் என்று பதிவிட்டதோடு, ஜனவரியில் கட்சி துவக்க போவதாகவும், அதற்கான தேதியை டிசம்பர் 31இல் அறிவிக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

ரஜினியின் இந்த அறிவிப்பை அடுத்து அவர் வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது அதிமுகவுடன் கூட்டணி அமைக்காவிட்டால். ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவும், விமர்சனங்களும் கலந்த கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் மூத்த அரசியல்வாதியும், இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் தமது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில், ரஜினியின் இந்த அறிவிப்புக்கு இன்றைக்கு மட்டும் தான் ஆயுள் உண்டு. இதுவும் புஸ்வானம் ஆகிப்போய்விடும்.கட்சி தொடங்குவதற்கான எந்தவிதமான வாய்ப்பும் சூழலும் அவருக்கு அமையவில்லை. ரஜினி கட்சி ஆரம்பிக்கமாட்டார். பார்த்துக்கொண்டே இருங்கள். அவரது ரசிகர்களை மாற்றி மாற்றி ஏமாற்றுவது நல்லதல்ல என்று கூறினார்.

ஊழல் செய்தவர்கள் யார்: எடப்பாடி பழனிசாமியை விவாதத்துக்கு அழைக்கும் ஆ.ராசா!

பின்னர் ரஜினி கட்சி கட்சி ஆரம்பிக்க மாட்டார்’ என்று எதை வைத்து சொல்கிறீர்கள் என கேட்டதற்கு, '' மக்களையே சந்திக்காமல் எப்படி கட்சி நடத்துவார்? எப்படி தன்னுடைய இயக்கத்தை முன்னெடுத்து செல்லமுடியும்? அதனால், ஏழேழு ஜென்மத்திற்கும் தமிழகத்தில் ரஜினி கட்சி தொடங்கமாட்டார். அவருக்கு மக்கள் எழுச்சியும் உண்டாகாது. ரஜினி மன்றத்தில் இருப்பவர்கள், ஆதரிப்பவர்கள் எல்லோருக்கும் 55 வயதிற்குமேல்தான் ஆகிறது.

அதனை வைத்து என்ன அறுவடை செய்யமுடியும்? என பதிலளித்தார். ஒருவேளை ரஜினி கட்சி ஆரம்பிக்கும் போது யாருக்கு பாதகமாக அமையும் என்று நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு, '' ரஜினிக்குத்தான் மிகப்பெரிய பாதகம். அவருடைய உடல்நிலை ஏற்கனவே சீர்கெட்டிருக்கிறது என்பதை அறிவித்திருக்கிறார். ’கொரோனா யாரை எப்போது தாக்கும் என்பது யாருக்கும் தெரியாது’ என்று அவரே சொல்லிவிட்டு, இப்போது கட்சி ஆரம்பித்திருப்பதால் பாதிப்பு அவருக்குத்தான் என இவ்வாறு கூறினார்.

அடுத்த செய்தி