ஆப்நகரம்

அரசியல் எனக்கு வேண்டாம் : நாஞ்சில் சம்பத்

டிடிவி தினகரனின் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் அரசியலை விட்டு விலகுவதாக கூறியிருக்கிறார்.

Samayam Tamil 17 Mar 2018, 10:25 am
டிடிவி தினகரனின் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் அரசியலை விட்டு விலகுவதாக கூறியிருக்கிறார்.
Samayam Tamil nanjil sampath relieve from politics
அரசியல் எனக்கு வேண்டாம் : நாஞ்சில் சம்பத்


தற்போதைய அதிமுகவிலிருந்து டிடிவி தினகரன் நீக்கப்பட்ட பிறகு அவர் சார்பில் இயங்கியவர் நாஞ்சில் சம்பத் . தற்போது அவர் அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,’’எனது மைத்துனரின் மகனும் அவரது மனைவியும் குரங்கணி காட்டுத்தீயில் இறந்துவிட்டனர். மேலூரில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அறிமுக விழாவுக்கு என்னால் செல்ல முடியவில்லை. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் எனக்கு உடன்பாடில்லை. அண்ணா, திராவிடம் என்பதை தவிர்த்துவிட்டு என்னால் பேசமுடியாது.

அண்ணாவையும் , திராவிடத்தையும் தவித்துவிட்டு கட்சி நடத்தலாம் என்று டிடிவி தினகரன் நம்புகிறார். அவருடைய நம்பிக்கை வெற்றிபெற வாழ்த்துகிறேன். நான் இனிமேல் அந்த அமைப்பில் இல்லை. நான் இனி எந்த அரசியலிலும் இல்லை. மேலும் டிடிவி தினகரன் பச்சை படுகொலையை செய்திருக்கிறார். இந்த அநியாயத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இனி என்னை தமிழ் இலக்கிய மேடைகளில் பார்க்கலாம் . ஆனால் அரசியலில் நான் இனி செயல்பட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி