ஆப்நகரம்

“இன்னோவா சம்பத் எனும் பழி இனி இல்லை”! : நாஞ்சில் சம்பத் அதிரடி!!

“இன்னோவா சம்பத் எனும் பழி இனி இல்லை”! : நாஞ்சில் சம்பத் அதிரடி!!

TOI Contributor 3 Jan 2017, 1:12 pm
சென்னை : ஜெயலலிதா கொடுத்த இன்னோவா காரை மீண்டும் அதிமுகவிடமே நாஞ்சில் சம்பத் ஒப்படைத்துள்ளார்.
Samayam Tamil nanjil sampath returned his innova car which is given by jayalalitha
“இன்னோவா சம்பத் எனும் பழி இனி இல்லை”! : நாஞ்சில் சம்பத் அதிரடி!!


தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலாவின் தலைமைக்கு நாஞ்சில் சம்பத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு வழங்கப்பட்ட இன்னோவா காரை அதிமுக தலைமை அலுவலகத்தில் திரும்ப கொடுத்துள்ளார்.

மதிமுகவில் இருந்த நாஞ்சில் சம்பத் அந்தக்கட்சியில் இருந்து விலகி 2012ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். அப்போது அவருக்கு துணை கொள்கைப்பரப்பு செயலாளர் என்ற பதவி வழங்கப்பட்டு இன்னோ கார் ஒன்றையும் ஜெயலலிதா பரிசாக அளித்தார். அதன் பின்னர் அவர் இன்னோவா சம்பத் என்று தொடர்ந்து விமர்சிக்கப்பட்டார்.

தற்போது சசிகலாவின் தலைமையை ஏற்கும் தகுதி எனக்கு இல்லை என்று கூறியுள்ள நாஞ்சில் சம்பத் பரிசாக பெற்ற இன்னோவா காரை திருப்பி கொடுத்துள்ளார். மேலும் பிரச்சார கூட்டங்களுக்கு மட்டுமே அந்த காரை பயன்படுத்தியதாகவும், தன் சொந்த தேவைக்கு உபயோக படுத்தியது இல்லை என்றும் கூறியுள்ளார். கடந்த 8 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரை திருப்பி கொடுப்பதால் தன் மீது உள்ள பழிச்சொல் தீர்ந்ததெனவும் கூறியுள்ளார்.


அடுத்த செய்தி