ஆப்நகரம்

டிடிவி தினகரனுக்கு நாஞ்சில் சம்பத் ஆதரவு

தினகரன் தலைமையில் அதிமுக நிச்சயமாக விஸ்வரூபம் எடுக்கும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

TNN 19 Apr 2017, 9:30 am
தினகரன் தலைமையில் அதிமுக நிச்சயமாக விஸ்வரூபம் எடுக்கும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil nanjil sampath support to ttv dinakaran
டிடிவி தினகரனுக்கு நாஞ்சில் சம்பத் ஆதரவு


ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக சசிகலா அணி என்றும், ஓபிஎஸ் அணி என்றும் இரண்டாகப் பிரிந்தது. இந்நிலையில், தற்போது டிடிவி தினகரன் கட்சியிலிருந்தும், பதவியிலிருந்தும் நீக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து அமைச்சர்கள் தினகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதன் காரணமாக தற்போது மூன்றாவது அணியும் உருவாகியுள்ளது என்று கட்சியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது மீண்டும் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அவசரம் அவசரமாக அடையாறில் உள்ள தினகரன் வீட்டில் ஆலோசனை நடத்தினர். ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத்தும் கலந்து கொண்டார். கிட்டத்தட்ட 3 மணிநேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக்கு பின்னர் டிடிவி தினகரன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத், ஓ.பி.எஸ். நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது.

தினகரன் தலைமையில் தான் அதிமுக செயல்படும். அதிமுகவின் திசையை தீர்மானிக்க காலம் தந்த தலைவன் டிடிவி தினகரன். ஜெயக்குமாரை நிதி அமைச்சராக உட்கார வைத்து அழகு பார்த்ததே தினகரன் தான். இன்னும் 2 நாட்களில் தினகரன் தலைமையில் அதிமுக விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுக்கும் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி