நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்களுக்காக அவரை கைது செய்வதாக மிரட்டக்கூடாது என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய நடிகர் கமல்ஹாசன், "தமிழக அரசியலின் அனைத்து துறைகளிலும் ஊழல் நிரம்பியுள்ளது" எனக் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு தமிழக அமைச்சர்கள் பலரும் எதிர்ப்பு எதிரிவித்து வருகின்றனர்.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் தலைவர்கள் பலரும் கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் ஆதரவாளரான நாஞ்சிர் சம்பத், கமலை ஒருமையில் பேசுவது, வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பவதாக மிரட்டுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவுக்கு உலக அரங்கில் அங்கீகாரம் கிடைக்கச் செய்வது கமலால் மட்டுமே முடியும். என்றும் கமலுக்கு புகழ்மாலை சூட்டினார்.
ஊழல் நடக்கிறது என்று மட்டும் சொல்லாமல் யார் செய்கிறார்கள் என்பதையும் வெளிப்படையாகச் சுட்டிக்காட்ட வேண்டும் என்று கமலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய நடிகர் கமல்ஹாசன், "தமிழக அரசியலின் அனைத்து துறைகளிலும் ஊழல் நிரம்பியுள்ளது" எனக் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு தமிழக அமைச்சர்கள் பலரும் எதிர்ப்பு எதிரிவித்து வருகின்றனர்.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் தலைவர்கள் பலரும் கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் ஆதரவாளரான நாஞ்சிர் சம்பத், கமலை ஒருமையில் பேசுவது, வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பவதாக மிரட்டுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவுக்கு உலக அரங்கில் அங்கீகாரம் கிடைக்கச் செய்வது கமலால் மட்டுமே முடியும். என்றும் கமலுக்கு புகழ்மாலை சூட்டினார்.
ஊழல் நடக்கிறது என்று மட்டும் சொல்லாமல் யார் செய்கிறார்கள் என்பதையும் வெளிப்படையாகச் சுட்டிக்காட்ட வேண்டும் என்று கமலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.