ஆப்நகரம்

நாராயணசாமி நாளை எம்.எல்.ஏவாக பதவியேற்பு

புதுவை நெல்லிதோப்பு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி நாளை எம்.எல்.ஏ வாக பதவி ஏற்பார் என்று புதுவை சபாநாயகர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

TNN 22 Nov 2016, 12:50 pm
புதுவை நெல்லிதோப்பு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி நாளை எம்.எல்.ஏ வாக பதவி ஏற்பார் என்று புதுவை சபாநாயகர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil narayanaswamy will take oath tomorrow as a mla
நாராயணசாமி நாளை எம்.எல்.ஏவாக பதவியேற்பு


புதுவையின் நெல்லித்தோப்பு தொகுதிக்கும் கடந்த 19-ம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.இந்தநிலையில் இடைத்தேர்ததலில் தன்னை ஏதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை 11,500 வாக்குகள் அதிகம் பெற்று நாராயணசாமி வெற்றி பெற்றுள்ளார்.

நாராயணசாமி சுமார் 18709 வாக்குகளும், ஓம்சக்தி சேகர் சுமார் 7557 வாக்களும் பெற்றுள்ளார்கள். நோட்டாவுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.இதன் பின்னர் நாராயணசாமி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் அவரிடம் வழங்கினார்.

இதனிடையே புதுவை நெல்லிதோப்பு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி நாளை எம்.எல்.ஏ வாக புதுவை சட்டமன்றத்தில் பதவி ஏற்க இருப்பதாக புதுவை சபாநாயகர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி