ஆப்நகரம்

கருணாநிதியின் உடலுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மோடி

முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் உடலுக்கு பிரதமா் நரேநத்திர மோடி மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.

Samayam Tamil 8 Aug 2018, 11:59 am
முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் உடலுக்கு பிரதமா் நரேநத்திர மோடி மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.
Samayam Tamil Modi


முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாிநிதி மருத்துவ சிகிச்சை பலன் அளிக்காமல் செவ்வாய்க் கிழமை மாலை 6.10 மணியளவில் உயிாிழந்ததாக காவேரி மருத்துவமனை அறிவித்தது. இதனைத் தொடா்ந்து அவரது உடல் கோபால புரம் இல்லம், சி.ஐ.டி.காலணி இல்லம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டு தற்போது ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு பொதுமக்கள், அரசியல் தலைவா்கள், சினிமா பிரபலங்கள், கவிஞா்கள், எழுத்தாளா்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனா். இந்நிலையில் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இந்திய பிரதமா் நரேந்திர மோடி நேரில் வருகை தந்தாா்.

ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு பிரதமா் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். அதன் பின்னா் தி.மு.க. செயல் தலைவா் மு.க.ஸ்டாலின், மாநிலங்களை உறுப்பினா் கனிமொழி, ராஜாத்தியம்மாள் உள்ளிட்டோருக்கு பிரதமா் மோடி பரிவுடன் ஆறுதல் கூறினாா்.


பிரதமா் நரேந்திர மோடியுடன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன், ஆளுநா் பன்வாரிலால் புரோகித், மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், மாநிலங்களவை உறுப்பினா் இல.கணேசன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

அடுத்த செய்தி