ஆப்நகரம்

கடற்கரையை தனி ஆளாக சுத்தம் செய்த மோடி: நம்பலைன்னா வீடியோவை பாருங்க!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோவளம் கடற்கரைப் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை இன்று அகற்றினார். சுத்தம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 20 Nov 2019, 1:17 pm
சீன அதிபர் ஷி ஜின்பிங், இந்திய பிரதமர் மோடி இரண்டாவது நாளாக சந்திக்கிறார். நேற்று இரவு கோவளம் தாஜ் பிஷர்மேன் கோவ் விடுதியில் தங்கியிருந்தார். இன்று காலை விடுதிக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் நடைப் பயிற்சி மேற்கொண்டார்.
Samayam Tamil Untitled collage


அப்போது கடற்கரையோரம் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை, காலியான வாட்டர் கேன்களை மோடி தனது கைகளால் எடுத்து ஒரு பையில் கொண்டு சென்றார். அதை ஹோட்டல் ஊழியர் ஜெயராஜிடம் கொடுத்து அப்புறப்படுத்த சொன்னதாக மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மோடி பிளாஸ்டிக் கழிவுகளை எடுக்கும் வீடியோ அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


ஏற்கெனவே தூய்மை இந்தியா திட்டம் மூலம் சுத்தமான இந்தியா அமையவேண்டும் என மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். மோடி உட்பட நாடு முழுவதும் பாஜகவினர் இந்தத் திட்டத்தை முன்னெடுத்தனர். இருப்பினும் சுத்தமாக இருக்கும் இடங்களில் குப்பைகளை கொட்டி துடைப்பம் கொண்டு கூட்டுவதாக விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு வலு சேர்க்கும் விதமாக பல வீடியோக்கள் வெளியாகின.


இந்நிலையில் மோடி தனது கைகளால் கோவளம் கடற்கரையில் சுமார் 30 நிமிடம் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய வீடியோ பொது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்த செய்தி