ஆப்நகரம்

சொகுசு காா் இறக்குமதி வழக்கில் ஜாமீன் பெற்றாா் நடராஜன்

சட்ட விரோதமாக வெளி நாடுகளில் இருந்து சொகுசு காா்களை இறக்குமதி செய்து அரசுக்கு மோசடி செய்ததாக நடைபெற்ற வழக்கில் சசிகலாவின் கணவா் நடராஜனுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Jan 2018, 1:46 pm
சட்ட விரோதமாக வெளி நாடுகளில் இருந்து சொகுசு காா்களை இறக்குமதி செய்து அரசுக்கு மோசடி செய்ததாக நடைபெற்ற வழக்கில் சசிகலாவின் கணவா் நடராஜனுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil natarajan get bail
சொகுசு காா் இறக்குமதி வழக்கில் ஜாமீன் பெற்றாா் நடராஜன்


கடந்த 1994-ஆம் ஆண்டு லண்டனில் இருந்து லெக்சஸ் என்ற சொகுசு கார் இறக்குமதி செய்ததில் வரிஏய்ப்பு மோசடியில் ஈடுபட்டதாக சசிகலா கணவர் நடராஜன், உறவினர் பாஸ்கரன் மற்றும் யோகேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் மீது சிபிஐ காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கில் நடராஜன் உள்பட 4 பேருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது.

இதனைத் தொடர்ந்து நடராஜன், பாஸ்கரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நடராஜன் மற்றும் பாஸ்கரன் உச்சநீதிமன்றத்தில் தலா ரூ.25 லட்சம் வைப்புத்தொகையாகச் செலுத்தி சிபிஐ நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தா்ா.

பின்னா் உடல்நிலை காரணம் இல்லை என்பதாலும், தொடா்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாலும் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி