ஆப்நகரம்

பயத்தின் உச்சத்தில் இருந்தேன்: மனம் திறக்கும் தமிழ் சிறுமி நதானியா ஜான்

கால்பந்து உலகக்கோப்பையில் வீரர்களுடன் அதிகாரப்பூர்வ பந்தை சுமந்து சென்ற அனுபவத்தை பற்றி தமிழகத்தை சேர்ந்த சிறுமி நதானியா ஜான் பேட்டியளித்துள்ளார்.

Samayam Tamil 28 Jun 2018, 12:42 pm
கால்பந்து உலகக்கோப்பையில் வீரர்களுடன்அதிகாரப்பூர்வபந்தை சுமந்து சென்ற அனுபவத்தை பற்றிதமிழகத்தைசேர்ந்தசிறுமி நதானியா ஜான் பேட்டியளித்துள்ளார்.
Samayam Tamil 7aad4d58-b15d-422c-a765-5cb5c7765f2f


உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின் உலகக்கோப்பை தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடந்த 2014ல் இத்தொடர் பிரேசிலில் நடந்தது.இதையடுத்து இந்த ஆண்டுக்கான 21வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில்நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உலகக்கோப்பையில் வீரர்களுடன் அதிகாரப்பூர்வ பந்தை சுமந்து செல்லும் பெருமையை தமிழகத்தை சேர்ந்த சிறுமி நதானியா ஜான் பெற்றார். இதனைத் தொடா்ந்து அவரது அனுபவம் குறித்து சென்னை டைம்ஸ் நாளிதழுக்கு அவா் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

’இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. கனவு நிஜமனாதுபோல் ஒரு அனுபவமாக இருந்தது. இதுவரை நான் திரையில் கண்ட தலைசிறந்த கால்பந்து வீரர்களை நேரில் காண்பதே ஆச்சரியமாக இருந்தது. நாங்கள்யாரும் விளையாட்டு வீரர்களுடன் பேச அனுமதிக்கப்படவில்லை. நாங்கள்பேசினால் அவர்களுக்குகவனச்சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளது. அனைத்து நாட்டு வீரர்களுக்கு மத்தியில் இந்தியாவின் சார்ப்பில் நான் அதிகாரப்பூர்வ பந்தை எடுத்து சென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அத்தருனத்தில் அச்சத்தின் உச்சதில் இருந்தேன். நாம் பயன்படுத்தும் பந்துபோல் இல்லாமல் அது மிக வித்தியாசமாக இருந்தது.மிகவும் வழுக்கியதால், நான் பந்தை கீழே போட்டுவிடுவேன் என்று நினைத்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை.

என்று அவா் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளாா்.

மேலும் இதுதொடர்பாகஅவரதுதாயாா் கூறுகையில் ’அவளுக்கு கால்பந்து பிடிக்கும் என்று எங்களுக்கு தெரியும், ஆனால் இப்படி ஒரு வாய்ப்பை பெருவாள் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை, நான் மட்டும்தான் அவருடன் சென்றிருந்தேன். அவரது தந்தை மற்றும் உறவினர்கள் ஊரில் இருந்து நடந்ததை தொலைகாட்சியில் பார்த்தார்கள். எங்களுக்கு ரஷ்யாவில் அனைத்து ஏற்பாடுகளும் சரிவர செய்து கொடுக்கப்பட்டது. ரஷ்யாவில் முக்கியமான இடத்தை எங்களுக்கு சுற்றி காண்பித்தார்கள். அவள் அனைத்து வீரர்களையும் சந்தித்தாள். ஆனால் மெஸ்சியை மட்டும் சந்திக்க முடியவில்லை. இதனால் அவளுக்கு சிறுது வருத்தம் ஏற்பட்டது. ஆனால் உலக அளவில் உள்ள எல்லோரும் அவளது திறமையை பார்த்து வியந்த தருணத்தை என்னால் ஒருபோதும் மறக்க இயலாது’ என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி