ஆப்நகரம்

கொள்ளையன் நாதுராம் சிறையில் அடைப்பு

சென்னையில் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த நாதுராம் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

Samayam Tamil 26 Jan 2018, 4:46 pm
சென்னையில் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த நாதுராம் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.
Samayam Tamil nathuram detained in puzhal jail
கொள்ளையன் நாதுராம் சிறையில் அடைப்பு


சென்னை, கொளத்தூா் நகைக்கடையில் 3.5 கிலோ நகையை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில், காவலர் பெரியபாண்டியன் தலைமையில், தனிப்படையினர் ராஜஸ்தான் சென்றனர். அங்கு கொள்ளையர்கள் பெரியப்பாண்டியனை சுட்டதாக கூறப்பட்டது.

தொடர்ந்து நடந்த விசாரனையில், உடனிருந்த மற்றொரு காவல்துறை அதிகாாி தான் பெரியபாண்டியனை சுட்டார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இந்த குற்றசம்பவத்தில் முக்கிய குற்றவாளியான நாதுராமை ராஜஸ்தான் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனா். தொடர்ந்து ஜெயப்பூரிலிருந்து விமானம் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை கொண்டு வரப்பட்ட நாதுராம் இன்று அதிகாலை நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜா்படுத்தப்பட்டாா்.

பின்னா் நாதுராம் உள்ளிட்ட 3 பேருக்கும் 9ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.

அடுத்த செய்தி