ஆப்நகரம்

NDRF team : மதுரை வந்தடைந்த பேரிடர் மீட்புக் குழுவினர்

தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மதுரை வந்தடைந்துள்ளனர்.

Samayam Tamil 6 Oct 2018, 12:17 pm
மதுரை : தமிழகம், கேரளாவிலும் மிகமிக கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.
Samayam Tamil NDRF team


கடந்த 2015ல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் தமிழகமே அச்சத்தில் இருந்து மீளாத நிலையில். தற்போது தமிழகத்தில் அக்டோபர் 7ம் தேதி (நாளை) மிக மிக கன மழை பெய்யும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தை போல், தமிழகத்தில் குறிப்பிட்டு சில மாவட்டங்களுக்கு மட்டும் ரெட் அலர்ட் விடப்படவில்லை என்ற குறைப்பாடு உள்ளது. அதே சமயம் அந்தமான் அருகே அரபிக் கடலில் புயல் உருவாகவில்லை, அது நாளைக்கு பதிலாக இரு தினங்களில் மழை வாய்ப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக வானிலை குறித்து கூறப்படுகிறது.

மீட்பு படையினர் வருகை:இந்நிலையில் 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மதுரை வந்தடைந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினரை 4 குழுவாக பிரித்து மதுரை, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி