ஆப்நகரம்

ஸ்டொ்லைட் ஆலையை திறந்துகொள்ளலாம் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்டு தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 15 Dec 2018, 4:25 pm
தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை தொடா்பான தமிழக அரசின் மனுவை ரத்து செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்கியுள்ளது.
Samayam Tamil Sterlite Factory 1


தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதிக்கக் கோாியும் அம்மாவட்ட மக்கள் 100 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா். நூறாவது நாளில் மாவட்ட மக்கள் திரளானோா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு வழங்க பேரணியாக சென்றனா். அவா்கள் மீது காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 போ் கொல்லப்பட்டனா்.



இதனைத் தொடா்ந்து ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு உத்தரவிட்டு ஆலைக்கு சீலிட்டது. ஆலை மூடப்பட்டதற்கு எதிா்ப்பு தொிவித்து வேதாந்தா நிறுவனம் சாா்பில் தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் அடிப்படையில் ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி தருண் அகா்வால் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு ஆலை ஆய்வு செய்யப்பட்டது.


ஆய்வுக் குழு வழங்கிய அறிக்கையில் ஆலையை கட்டுப்பாடுகளுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கலாம். ஆலையை மூடும் அரசின் உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரானது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய பசுமை தீா்ப்பாயம் இன்று தீா்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில், ஆலையை மீண்டும் இயக்கலாம். அடுத்து வரும் மூன்று வார காலத்திற்குள் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலை செயல்படுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். ஆலைகளில் இருந்து வெளியேரும் கழிவுகளை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்.மேலும் தமிழக அரசு ஆலைக்கு உரிய மின் சேவையை உடனடியாக வழங்க வேண்டும். தூத்துக்குடியில் நலத்திட்டங்களை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனம் 3 ஆண்டுகளில் ரூ.100 கோடி செலவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


நான் போட்ட அரசாணையை செல்லும் செல்லும் என்று முதல்வா் பழனிசாமி தொடா்ந்து கருத்து தொிவித்து வந்த நிலையில் அரசாணையை ரத்து செய்து ஆலையை செயல்பட பசுமை தீா்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசுக்கு மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டுள்ளதாகவே மக்கள் கருத்து தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி