ஆப்நகரம்

ஈஷா மஹாசிவராத்திரிக்கு தடையில்லை - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஈஷா மஹாசிவராத்திரி விழாவை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 10 Nov 2020, 6:04 pm
ஈஷா மஹாசிவராத்திரி விழாவைத் தடை செய்ய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒலி மாசு ஏற்படுத்தாமல் நடத்த உத்தரவிட்டுள்ளது. கோவை ஈஷா யோகா மையத்தின் 25-வது ஆண்டு மஹாசிவராத்திரி கடந்த பிப்ரவரியில் கோலாகலமாக நடந்தது. சத்குரு முன்னிலையில் நடக்கும் இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நேரில் பங்கேற்று வருகின்றனர்.
Samayam Tamil ஈஷா யோகா


ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடக்கும் மஹாசிவராத்திரி விழாவில் திரைப்பட நடிகர், நடிகைகள், பின்னணி பாடகர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை ஆரவாரமாக கொண்டு செல்வர். இந்த நிலையில், கோவை ஈஷா மஹாசிவராத்திரி விழாவைத் தடை செய்ய வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் விழாவை நடத்த தடையில்லை என உத்தரவிட்டுள்ளது.

சுற்றுசூழல் மாசு உள்ளிட்ட காரணங்களை முன் வைத்து ஈஷா மஹாசிவராத்திரி விழாவை தடை செய்யக்கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் பசுமை தீர்ப்பாயம் நேற்று (நவம்பர் 9) தீர்ப்பளித்துள்ளது.

ரேஷன் அரிசி சாப்பிட ஊருக்குள் புகுந்த யானைக் கூட்டம்!

அதில் விழாவுக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த பசுமை தீர்ப்பாயம், ”வழக்கம்போல் சம்பந்தப்பட்ட துறைகளில் உரிய அனுமதிகள் பெற்று கொண்டு மஹாசிவராத்திரி விழாவை தொடர்ந்து நடத்தலாம்” என உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை ஈஷா வரவேற்கிறது.

தமிழகத்தின் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக ஈஷா பல ஆண்டுகளாக களத்தில் செயல் செய்து வருகிறது. பசுமை கரங்கள் திட்டம், நதிகளை மீட்போம் இயக்கம், காவேரி கூக்குரல் இயக்கம் போன்றவை இதில் முக்கியமானவை. நாட்டின் உயரிய சுற்றுச்சூழல் விருதுகளில் ஒன்றான இந்திரா காந்தி பரியவரன் புரஸ்கார் விருது, இந்தியா டுடே நாளிதழின் ‘ஷஃபைகிரி’ விருது, தேசிய தண்ணீர் விருது போன்ற விருதுகள் கிடைத்துள்ளன. மேலும் ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பின் சர்வதேச அங்கீகாரமும் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி