ஆப்நகரம்

கழிவுநீர் தொட்டியில் விழுந்து அரசு ஊழியர் பலி: தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

காஞ்சிபுரத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து வேளாண் அலுவலர் பலியான விவகாரத்துக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Samayam Tamil 18 Dec 2020, 6:56 pm
காஞ்சிபுரம் மாவட்டம் வேளிங்கப்பட்டறை ஆசிரியர் தெருவைச் சேர்ந்தவர் சரண்யா (24). மாற்றுத்திறனாளியான சரண்யா களக்காட்டூரில் உள்ள வேளாண் மேம்பாட்டு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார்.
Samayam Tamil saranya


இந்த அலுவலகத்தில் கழிப்பறை வசதி இல்லை. இந்நிலையில் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி அன்று இயற்கை உபாதை கழிப்பதற்காக சரண்யா அருகிலிருந்த குடியிருப்புக்கு சென்றார். அப்போது சாலையில் மூடப்படாமல் இருந்த கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

நகராட்சியின் அலட்சிய போக்கால் மூடப்படாமல் இருந்த கழிவு நீர் தொட்டியில் அரசு அதிகாரி விழுந்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சம்பவம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சாதியில்லா சமுதாயத்தை நோக்கி செல்லும்போது சாதிவாரி கணக்கெடுப்பு ஏன்? - சென்னை ஐகோர்ட்

நோட்டீஸை வெளியிட்டுள்ள ஆணையம், ''மக்களின் நலனுக்காக தங்கள் கடமைகளை நிறைவேற்றும் தனது ஊழியர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மாநில அரசு முதன்மையாகத் தவறிவிட்டதாகத் தெரிகிறது. ஒரு பெண் ஊழியரின் வாழ்க்கையையும், கண்ணியத்தையும் பாதுக்காக்க தவறிய தமிழக அரசு, அரசு அலுவலகத்தில் அடிப்படை வசதியை வழங்கத் தவறிய ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், இந்த விவகாரத்தை குறித்து விரிவான பதில் அளித்தும் 6 வாரங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி