ஆப்நகரம்

தேசிய மாசு தடுப்பு தினமும் நுரையுடன் கலங்கிய மெரினாவும்!!

சென்னை மெரினாவில் சுமார் இரண்டடி உயரத்திற்கு நுரையுடன் கடல் அலை உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 2 Dec 2019, 2:29 pm
சென்னை மெரினாவில் சுமார் இரண்டடி உயரத்திற்கு நுரையுடன் கடல் அலை உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil national pollution prevention day and foamy waves in marina beach
தேசிய மாசு தடுப்பு தினமும் நுரையுடன் கலங்கிய மெரினாவும்!!


கடலில் களங்கம்...

சென்னை நகரம் மற்றும் புறநகர்களில் இருந்து வரும் கழிவு நீர் அடையாறு வழியாக வங்கக் கடலில் கலப்பதால் மாசு அடைவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பருவமழை காரணமா...

கடந்த வாரத்தில் இருந்து தொடர்ந்து கடல் நீரில் நுரை அதிகரித்து காணப்படுகிறது. பொதுவாக பருவமழையின்போது இதுபோன்று நுரை ஏற்படுகிறது. கடந்தாண்டும் இதேபோன்று நுரை காணப்பட்டது.

வேகமான காற்று

பருவமழையின்போது காற்றின் வேகம் அதிகரிக்கும்போது மாசு கலந்த கடல் நீரில் நுரை ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.

கழிவு நீர் சுத்தம் செய்யவதில்லை...

சென்னையின் புறநகர்களில் இருக்கும் தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறும் மாசுபடிந்த நீர் கடல் நீரில் அப்படியே கலக்கிறது. சுத்திகரிப்பு செய்வதில்லை. இதுவும் நுரை ஏற்படுவதற்கு ஒரு காரணம். இது மீனவ மக்களின் ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது.

தேசிய மாசு தடுப்பு தினம்

இன்று தேசிய மாசு தடுப்பு தினம். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2ஆம் தேதி தேசிய மாசு தடுப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளிலாவது இதுபோன்று மாசுபடிந்த நீரை கடலுக்குள் செலுத்துவதில்லை என்ற உறுதிமொழி எடுப்போம்.

போபால் நச்சு வாயு

போபாலில் 1984, டிசம்பர் 2,3 ஆகிய தேதிகளில் வெளியேறிய நச்சு வாயுவால் 3,787 பேர் இறந்தனர். இந்த தினம்தான் மாசு தடுப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியாவில் மாசு அதிகம்

உலகளவில் காற்று மாசுபாட்டினால் பாதிக்கப்பட்ட 15 நகரங்களில் 14 நகரங்கள் இந்தியாவில் இருக்கின்றன என்று சமீபத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது

டெல்லியில் மாசு அதிகம்

டெல்லி உள்பட தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சமீபத்தில் மாசு அதிகரித்து காணப்படுகிறது. இதற்குக் காரணம் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசு மற்றும் பயிர் கழிவுகளை எரிப்பது என்று கூறப்பட்டு இருந்தது.

டீசல் ஆட்டோவுக்கு தடை

மாசுவை தடுக்கும் வகையில் சென்னையில் டீசல் ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்குவதில்லை. திரவ பெட்ரோலியம் மூலம் இயக்கும் ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. புதிய ஆட்டோக்கள் அனைத்தும் திரவ பெட்ரோலியத்திற்கு மாரி வருகின்றன.

கழிவு நீர் சுத்திகரிப்பு அவசியம்

மாசுவை கட்டுப்படுத்துவது என்பது ஒவ்வொருவரின் கையிலும் உள்ளது. தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்தம் செய்தே வெளியே அனுப்ப வேண்டும் என்பதில் அரசு கண்டிப்பாக இருக்க வேண்டும். இதனால்தான், கூவம் போன்றவை இன்று பார்க்க சகிக்க முடியாமல் உள்ளது.


இந்த நீர் கடலில் கலக்கும்போது கழிவுகளில் இருக்கும் மாசுவால் நுரை ஏற்படுகிறது. பருவமழை காலங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்போதும், கடலில் முகத்துவாரங்களில் தேங்கும் நீர் அடித்துச் செல்லப்பட்டு கடலில் கலப்பதாலும் நுரை ஏற்படுகிறது என்று மாசு கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி