ஆப்நகரம்

வர்தா புயலை சமாளிக்க தயாராக உள்ள சென்னை மாநகராட்சி

வர்தா புயலை சமாளிக்கும் பொருட்டு சென்னை மாநகராட்சி பல்வேறு ஏற்பாடுகள் தயார் நிலையில் வைத்துள்ளது.

TOI Contributor 12 Dec 2016, 8:31 am
சென்னை : வர்தா புயலை சமாளிக்கும் பொருட்டு சென்னை மாநகராட்சி பல்வேறு ஏற்பாடுகள் தயார் நிலையில் வைத்துள்ளது.
Samayam Tamil navy rescue teams on high alert as tamil nadu
வர்தா புயலை சமாளிக்க தயாராக உள்ள சென்னை மாநகராட்சி


வர்தா புயல் இன்று பிற்பகல கரையை கடக்கும் என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளதால் அதிகனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

இந்த வர்தா புயலை சமாளிக்கும் பொருட்டு சென்னை மாநகராட்சி மீட்பு பணிகளில் ஈடுபட 108 படகுகள் தயாராக வைக்கப்பட்டுள்ளது, 176 நிவாரண முகாம்கள் குடிநீர், கழிப்பிட வசதியுடன் வைக்கப்பட்டுள்ளது.

சாலையில் மரம் ஏதேனும் முறிந்துவிழுந்தால் அதை அகற்ற 45 மர அறுவை இயந்திரங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புக்குழுவினர் 80 பேர் படகுகளுடன் தயாராக உள்ளனர்.

சாலை, சுரங்கப்பாதையில் தேங்கும் மழை நீரை அகற்ற 622 மோட்டார் பம்புகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி