ஆப்நகரம்

பலமணி நேர மின்தடை- நள்ளிரவில் துணைமின் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!

பல மணி நேரமாக மின்தடை ஏற்பட்ட நிலையில், ஆவேசமடைந்த மக்கள் நள்ளிரவில் மின்வாரிய துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு!

Samayam Tamil 2 Jun 2019, 11:24 am
அரக்கோணம் அருகே பல மணி நேரமாக மின்தடை ஏற்பட்ட நிலையில், ஆவேசமடைந்த மக்கள் நள்ளிரவில் மின்வாரிய துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
Samayam Tamil பலமணி நேர மின்தடை- நள்ளிரவில் துணைமின் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!
பலமணி நேர மின்தடை- நள்ளிரவில் துணைமின் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!


வேலூர் மாவட்டம் அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் ஆங்காங்கே பரவலான மழை பெய்தது. இதன் ஒரு பகுதியாக ஜடேரி பகுதியில் மாலை முதலே மின் தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால், அப்பகுதிவாசிகள் மின்வாரிய அலுவலகத்திற்கு தொலைபேசி மூலமாக பல முறை தொடர்பு கொண்டனர். ஆனால் ஒரு முறை கூட யாரும் அழைப்பை எடுக்கவில்லை.

இதனால் ஆவேசம் அடைந்த அப்பகுதி மக்கள், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை கண்டித்து நள்ளிரவில் மோசூர் துணை மின் நிலையத்தை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற நகர காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பின்னர் மின்வாரிய உயர் அதிகாரிகள் மின் தடை போக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

மின்வாரிய அலுவலகத்தை நள்ளிரவில் மக்கள் திடீரென முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி