ஆப்நகரம்

தேர்தலை புறக்கணிப்போம்: மூன்று கிராமத்தினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்

ஆத்தூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராத அரசை கண்டித்து தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி, மூன்று கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Samayam Tamil 3 Apr 2019, 12:01 pm
ஆத்தூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராத அரசை கண்டித்து தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி, மூன்று கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil att


ஆத்தூர் அருகே பைத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட தளவாய்பட்டி, கல்லுகட்டு, வானரம் கிராமத்தில் சுமார் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாலை வசதி, குடிநீர் வசதி கேட்டு கிராம மக்கள் பலமுறை முறையிட்டும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தினர் 500க்கும் மேற்பட்டோர் நேற்று காலை அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஆத்தூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தங்கள் பகுதியில் இருந்து பைத்துர் செல்லும் வரை தார் சாலை அமைத்து தர வேண்டும். இல்லையென்றால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப் போட மாட்டோம் என காவல்துறை மற்றும் வருவாய் துறையிடம் கூறினர்.

இதனை அடுத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, சிறைபிடித்த பேருந்தை கிராமத்தினர் விடுவித்தனர். மேலும் உறுதியளித்தபடி நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், கண்டிப்பாக தேர்தலை புறக்கணிப்போம் என கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

அடுத்த செய்தி