ஆப்நகரம்

அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பேர் படுகாயம்!

கொடைக்கானலில் உள்ள ஆடலூரிலிருந்து மதுரை நோக்கி வந்துக்கொண்டிருந்த பேருந்து லாரியுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

Samayam Tamil 24 Feb 2019, 6:38 pm
கொடைக்கானலில் உள்ள ஆடலூரிலிருந்து மதுரை நோக்கி வந்துக்கொண்டிருந்த பேருந்து லாரியுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
Samayam Tamil download (4)


கொடைக்கானலில் உள்ள ஆடலூரிலிருந்து மதுரையை நோக்கி அரசு பேருந்து வந்துகொண்டிருந்தது. இந்த அரசு பேருந்து பெரும்பாறை அருகே குப்பம்மாள்பட்டி வெக்கடிகாடு என்ற இடத்திற்கு வந்தபோது எதிரில் வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.

விபத்தில் பேருந்து ஓட்டுநர் செல்வராஜ், லாரி ஓட்டுநர் டேனிஸ் அந்தோணி, நடத்துனர் சுதாகர், பயணிகள் குப்பம்மாள்பட்டியை சேர்ந்த மாரிச்செல்வி, லட்சுமி, பழனிச்சமீ,பார்வதி உட்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவயிடத்தில் இருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்தில் படுகாயம் அடைந்த 13 பேரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி