ஆப்நகரம்

ஒரு வருடமாக குடிநீர் வசதி இல்லை: ஆத்திரமடைந்த கிராமத்தினர் சாலை மறியல்

திருப்பத்தூர் அருகே முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Samayam Tamil 8 Apr 2019, 3:22 pm
திருப்பத்தூர் அருகே முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
Samayam Tamil ஒரு வருடமாக குடிநீர் வசதி இல்லை: ஆத்திரமடைந்த கிராமத்தினர் சாலை மறியல்
ஒரு வருடமாக குடிநீர் வசதி இல்லை: ஆத்திரமடைந்த கிராமத்தினர் சாலை மறியல்


வேலூர் மாவட்டம் குரிசிலாபட்டு ஊராட்சிக்குட்பட்ட பள்ளத்தூர் கிராமத்தில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக குடிநீர் வசதி இல்லை. இதுதொடர்பாக அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருப்பத்தூர் - ஆலங்காயம் சாலையில் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். குரிசிலாபட்டு போலீசாரும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பத்தூர் பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுவதால் தொடர்ந்து குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. பல்வேறு பகுதிகளில் தினமும் சாலை மறியல் போராட்டம் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இதை அதிகாரிகள் கவனத்தில் எடுத்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி